மழலை மொழியில்... அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வாக்கு சேகரிக்கும் 8 வயது மகள்!
விராலிமலை: விராலிமலையில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து அவரது எட்டு வயது மகள் மேற்கொள்ளும் பிரச்சாரத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
இந்நிலையில், தனது தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் விஜயபாஸ்கர். அவருடன் அவரது எட்டு வயது மகள் பிரியதர்ஷினி விராலிமலை தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.
தனது பிரச்சாரத்தில் அதிமுக சாதனைகளை விளக்கிக் கூறும் பிரியதர்ஷினி, கடந்த 5 ஆண்டுகளில் தனது தந்தை விஜயபாஸ்கர் விராலிமலைத் தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்களையும் வரிசைப் படுத்துகிறார்.
ஐந்தாம் வகுப்பு படித்து வரும் பிரியதர்ஷினியின் மழலை மொழிப் பிரச்சாரத்தை அப்பகுதி மக்கள் ஆர்வமும் கவனிக்கின்றனர். இதனால் அவரது பேச்சுக்கு அப்பகுதியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.