For Daily Alerts
Just In
சென்னை நகைக் கடை அதிபர் கொலைவழக்கில் குற்றவாளிக்கு தூக்கு! பூந்தமல்லி கோர்ட் அதிரடி தீர்ப்பு
சென்னை: நெற்குன்றம் பகுதியை சேர்ந்த நகைக்கடை அதிபர் கொலை வழக்கில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது பூந்தமல்லி கோர்ட்.
சென்னையை அடுத்துள்ள நெற்குன்றம் பகுதியில் நகைக் கடை வைத்திருந்தவர் குணராம். கடந்த 2012ம் ஆண்டு, ஏப்ரல் 14ம்தேதி, இவரை கொலை செய்த ராமஜெயம் என்பவர், நகைகளை கொள்ளையடித்தார்.
இவ்வழக்கில் ராமஜெயத்தை கைது செய்த போலீசார், அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவ்வழக்கு, பூந்தமல்லியிலுள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், குணராமுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Comments
English summary
Court issued death penalty for the accused who arrested in conection with Chennai jewellery shop owner murder case.
Story first published: Wednesday, January 21, 2015, 18:09 [IST]