For Daily Alerts
Just In
அமைச்சர் செல்லூர் ராஜு உருவ பொம்மையை எரித்து, சாலை மறியல்.. தீபா ஆதரவாளர்கள் திடீர் கொந்தளிப்பு
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அவர்கள் போராட்டம் நடத்தினர். செல்லூர் ராஜுவின் உருவ பொம்மையை எரித்தனர். போலீசார் விரைந்து வந்து அவர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.
சென்னை: தீபாவை தரக்குறைவாக பேசியதாக கூறி அவரது ஆதராவாளர்கள், அமைச்சர் செல்லூர் ராஜு உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு நிலவியது.
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் அதிமுக அம்மா கட்சி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். போலவே, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிடுகிறார்.
தீபாவை அமைச்சர் செல்லூர் ராஜு தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தீபா பேரவை நிர்வாகி சுப்பிரமணி என்பவர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அவர்கள் போராட்டம் நடத்தினர். செல்லூர் ராஜுவின் உருவ பொம்மையை எரித்தனர். போலீசார் விரைந்து வந்து அவர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் நேற்று மாலை பரபரப்பான சூழல் நிலவியது.
Comments
English summary
Deepa followers enter protests in RK Nagar, they accusing Minister Sellur Raju criticism their leader.
Story first published: Saturday, March 25, 2017, 16:36 [IST]