For Daily Alerts
Just In
ஆவின் முறைகேடு பற்றி வெள்ளையறிக்கை கேட்ட விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக பால்வளத்துறை அமைச்சர் ரமணா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்த ஆவின் பால் கொள்முதல் முறைகேடு குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் உள்ளதாக கூறி விஜயகாந்த் மீது வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, பால்வளத்துறை அமைச்சர் ரமணா சார்பில் வழக்கறிஞர் ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில் பல அவதூறு வழக்குகள் நிலைவையிலுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
A defamation case against DMDK chief Vijayakanth has been filed by minister Ramana in Chennai first sessions court.
Story first published: Friday, November 28, 2014, 13:27 [IST]