For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்க மொழி திணிப்பை எதிர்த்து.. தனி மாநிலத்தை கேட்டு.. கூர்க்கா இன மக்கள் சென்னையில் போராட்டம்

கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை முன் வைத்து சென்னை பெசண்ட் நகரில் கூர்க்கா இன மக்கள் போராட்டம் நடத்தினர்.

Google Oneindia Tamil News

சென்னை: கூர்க்கா இன மக்கள் அதிகம் வாழும் பகுதியை பிரிந்து கூர்க்காலாந்து என்ற தனி மாநிலத்தை அமைக்க கோரி சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் கூர்க்கா இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் வசித்து வரும் கூர்க்காலாந்து மக்கள் தங்களுக்கு தனி மாநிலம் வழங்க வேண்டும் என்ற கோரி வருகின்றனர். அங்கு கடந்த 15 நாட்களாக கூர்க்காலாந்து மாநிலம் கேட்டு நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் வசித்து வரும் கூர்க்கா இன மக்கள், தங்களுக்கு தனி மாநிலம் வழங்க வேண்டும் என்று கோரி சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனி மாநிலக் கோரிக்கை

தனி மாநிலக் கோரிக்கை

மேற்கு வங்க மாநிலத்தில் வசித்து வரும் தங்களை வங்க மொழி கற்க வேண்டும் என்று மாநில அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால் தங்களது தாய்மொழியை இழக்க வேண்டி வரும் என்று கூர்க்கா இன மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னையில் போராட்டம்

சென்னையில் போராட்டம்

கூர்க்காலாந்தை தனி மாநிலமாக பிரித்து தங்களுக்கு வழங்க வேண்டும் என்று அம்மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெறுவது போன்றே சென்னையிலும் போராட்டம் நடைபெற்றது. கூர்க்கா இன மக்கள் சென்னை மட்டுமின்றி கோவை, மதுரை போன்ற இடங்களிலும் வசித்து வருகிறார்கள்.

வங்க மொழி திணிப்பு

வங்க மொழி திணிப்பு

இந்தி மொழியை மத்திய அரசு கட்டாயமாக்கிய போது, மேற்கு வங்க மொழியான வங்காள மொழியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு கட்டாயமாக்கினார். 9ம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு செல்லக் கூடியவர்கள் 10ம் வகுப்பில் கட்டாயமாக வங்காள மொழியில் தான் தேர்வு எழுத வேண்டும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே கூர்க்கா இன மக்கள் மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு அளித்து சென்னையில் உள்ள அவ்வின மக்களும் போராட்டத்தை நடத்தினார். சென்னை நடைபெற்ற போராட்டத்தில் வங்க மொழி திணிப்பிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார்.

English summary
Gorkhas stage protest at Besant Nagar in Chennai to demand Gorkhaland.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X