சிஎஸ்கே ரசிகர்களை போல வருமா.. உருகும் டோணி
சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்குதான் அதிக ரசிகர்கள் இருப்பதாக அந்த அணி கேப்டன் டோணி தெரிவித்தார்.
டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் தொடக்க விழாவில் பங்கேற்க சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு டோணி நேற்று வந்திருந்தார். அப்போது டிஎன்பிஎல் வெப்சைட்டுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்குதான் ரிசகர்கள் அதிகம். கடந்த இரு ஆண்டுகளாக இந்த அணி ஆட முடியவில்லை என்றாலும் ரசிகர்கள் ஆதரவு தொடர்ந்தபடிதான் இருந்தது. சிஎஸ்கே எப்போது திரும்பும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். சென்னையில் இந்த 2 வருட காலத்தில் டெஸ்ட் போட்டியொன்று மட்டுமே நடந்துள்ளது. ரசிகர்களின் காத்திருப்புக்கு இப்போது முடிவு கிடைத்துள்ளது.
அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ஆடும். 2 வருடங்கள் கழித்து இந்த மைதானத்திற்கு நான் இப்போதுதான் மீண்டும் வந்துள்ளேன். இந்த போட்டித்தொடர் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும். இவ்வாறு டோணி தெரிவித்தார்.