For Daily Alerts
Just In
60 நாட்கள் அமைதியாக இருந்தததாலேயே அடங்கி போனதாக அர்த்தம் இல்லை: தினகரன் பொளேர்
60 நாட்கள் அமைதியாக இருந்ததாலேயே அடங்கி போனதாக அர்த்தம் இல்லை என கூறியிருக்கிறார் டிடிவி தினகரன்.
சென்னை: 60 நாட்கள் தாம் அமைதியாக இருந்ததாலேயே அடங்கி போனதாக அர்த்தம் கிடையாது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக(அம்மா) அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டோம். சில அமைச்சர்கள் கூறியதால் 2 மாதங்களாக அமைதி காத்தேன்.
அமைதியாக இருந்துவிட்டதாலேயே அடங்கி போய்விட்டேன் என்பது அர்த்தம் அல்ல. 60 நாட்கள் கால அவகாசம் தந்தோம்... ஆனால் அணிகள் இணையவில்லை.
அமைச்சர்களால் அணிகளை இணைக்க முடியாது. அது என்னால்தான் சாத்தியமாகும் என்பது எனக்கு முன்பே தெரியும். எங்கள் உறவினர்களுக்குள் எப்போதும் கருத்து வேறுபாடு இருந்தது இல்லை... இனியும் வராது.
இவ்வாறு தினகரன் கூறினார்.
Comments
English summary
ADMK (Amma) deputy general secretary Dinakaran said, We are working towards the merger of party factions, very soon you will hear a good news.
Story first published: Friday, August 4, 2017, 21:55 [IST]