சிறந்த மாநகராட்சிக்கான விருதை தட்டிச் சென்ற திண்டுக்கல்
சென்னை: சிறந்த மாநகராட்சிக்கான விருதை திண்டுக்கல்லுக்கு கிடைத்துள்ளது. சென்னையில் முதல்வர் ஜெயலலிதா இந்த விருதுக்கான காசோலையை வழங்கினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகள் இன்று வழங்கப்பட்டன.
விருது பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் விவரம் வருமாறு:
சிறந்த மாநகராட்சி- திண்டுக்கல் மாநகராட்சி. (ரூ.25 லட்சம் காசோலை)
முதல் பரிசு-பட்டுக்கோட்டை.
2-வது பரிசு- பெரம்பலூர்.
3-வது பரிசு- ராமநாதபுரம்.
முதல் பரிசு- பரமத்திவேலூர் (ரூ10 லட்சம்)
2-வது பரிசு- சின்னசேலம் (ரூ5 லட்சம்)
3-வது பரிசு- பெரிய நாயக்கன்பாளையம்.
சிறந்த கூட்டுறவு வங்கி- சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி.
முதல்வரின் சிறந்த மாநில இளைஞர் விருது:
பெண்கள்: நாகர்கோவில் திருவிளை மாஷா நஜீம், மதுரை பெத்தாணியாபுரம் அபர்ணா. (ரூ.50 ஆயிரம்)
ஆண்கள்: எழும்பூர் ரூபன் சந்தோஷ், மதுரை செல்லுர் நந்தவனம் சரவண குமார், பழனி கோதை மங்கலம் முகமது ரஷீக். (ரூ50 ஆயிரம்)