ஆர்.கே.நகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் வடசென்னை மா.செ. மதிவாணன்: விஜயகாந்த்
ஆர்.கே.நகர் தொகுதி தேமுதிக வேட்பாளராக வடசென்னை மாவட்ட செயலர் மதிவாணன் போட்டியிடுவார் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளராக வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் போட்டியிடுவார் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் போட்டியிடப் போவதாக எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவை பொதுச்செயலர் தீபா அறிவித்துள்ளார்.
திமுக, ஓபிஎஸ் அதிமுக, சசிகலா அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிட உள்ளன. இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தமது கட்சி வேட்பாளரை அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் வடசென்னை தேமுதிக மாவட்ட செயலாளர் மதிவாணன் வேட்பாளராக போட்டியிடுவார் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஆர்.கே.நகரில் தேமுதிக தனித்தே போட்டியிடுகிறது என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
முன்னதாக விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை போட்டியிட தேமுதிக நிர்வாகிகள் வலியுறுத்தினர். ஆனால் இதை பிரேமலதா நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.