பன்னீர் செல்வம் பட்ஜெட் சமர்ப்பிப்பதைப் பார்க்க "அண்ணன்" வரலை!
சென்னை: தமிழக சட்டசபையில், இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவில்லை.
கடந்த சட்டசபைக் கூட்டத்தின்போது தேமுதிக எம்.எல்.ஏக்கள் ரகளை செய்ததால் பெரும் அமளி ஏற்பட்டு அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நடப்புத் தொடர் முழுமைக்கும் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விஜயகாந்த் கூட்டத்திற்கு வராததால் சஸ்பெண்ட் நடவடிக்கையிலிருந்து தப்பித்தார். எனவே இன்றைய கூட்டத்தில் அவர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் அவர் வருவாரா என்பதில் சந்தேகம் இருந்து வந்தது.
எதிர்பார்த்தது போலவே விஜயகாந்த் இன்றைய கூட்டத்திற்கு வரவில்லை. அதேசமயம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிற தேமுதிக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு வந்தனர். அவைக்கு வெளியே இருந்தபடி அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேசமயம், சஸ்பெண்ட் செய்யப்படாத அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு வந்திருந்தனர்.