பண்ருட்டியில் மீண்டும் வேலையை காண்பித்த விஜயகாந்த்! தொண்டருக்கு 'பளார்'!!
கடலூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பண்ருட்டியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தொண்டரை அவரது மனைவி, குழந்தைகள் முன் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் பரபரப்பான பல காட்சிகள் தினம் அரங்கேறி வரும் நிலையில், தேமுதிக உங்களுடன் நான் என்னும் நிகழ்ச்சியை நடத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கும் . இறுதியில் கட்சித் தொண்டர்களுடன் விஜயகாந்த் புகைப்படம் எடுத்துக்கொள்வார்.
பதற்றமில்லாமல் பண்ருட்டி வந்த விஜயகாந்த்
நேற்று உங்களுடன் நான் நிகழ்ச்சி, சிதம்பரம், பண்ருட்டி உள்ளிட்ட ஊர்களில் நடந்தது. சிதம்பரத்தில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, பண்ருட்டி காடாம்புலியூரில் ஒரு திருமண மண்டபத்தில் 'உங்களுடன் நான்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாலை 5 மணியளவில் வந்தார்.
விஜயகாந்த் கோபம்
அங்கு தொண்டர்கள் கூட்டம் அதிகமிருந்தது. அவர்கள் தலைவர் விஜயகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர். அதனால் முண்டியடித்துச் சென்றார்கள். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதிர்ச்சியில் விஜயகாந்த்
கூட்டத்தை ஒழுங்கப்படுத்தச் சொல்லிவிட்டு, விஜயகாந்ந், அங்கிருந்த அறைக்குள் சென்றுவிட்டார். சிறிதுநேரம் கழித்து மீண்டும் வந்ததும் அப்போதும் மேடை மேல் நிறைய தொண்டர்கள் ஏறி நின்றுகொண்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்பும் அப்போது இல்லை.
அடிவாங்கிய தொண்டரின் சிரித்த முகம்
இதனால், மீண்டும் அவர் அறைக்குள் சென்றார். பிறகு, கூட்ட்டத்தை ஓரளவு நிர்வாகிகள் கட்டுப்படுத்தினர். அதன்பிறகு, மேடையில் தொண்டர்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது, திடீரென ஒரு தொண்டரை அடித்தார். அடித்த சில நிமிடங்களிலேயே அந்த தொண்டருடன் சிரித்துப் பேசினார். தொண்டரும் அடிவாங்கியதை மறந்து சிரித்துப் பேசி, புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.
தலைவர் இன்னும் ஹீரோதான்
தேர்தல் பிரச்சாரத்தின்போது, வேட்பாளரை அடித்த சம்பவம் நினைவிருக்கலாம். செய்தியாளர் சந்திப்பின்போது, 'தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ' என்று விஜயகாந்த் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியதுண்டு. 'தலைவர் சினிமாவில் ஸ்டண்ட் மேன்களை அடித்ததை இன்னும் மறக்கவில்லை போலும்' என அவரது தொண்டர்கள் இதை காமெடியாக நினைத்துக்கொள்கிறார்கள்.