For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மா.. அம்மான்னு யாராச்சும் சொன்னீங்க அவ்வளவு தான்.. மீண்டும் நாக்கை துறுத்திய விஜயகாந்த்!

அம்மா அம்மானு யாராசுக்கம் சொன்னால் அவ்வளவு தான் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமாசு செய்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

நெல்லை : நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் அம்மா, அம்மா என்று யாராச்சும் சொன்னா அவ்வளவு தான் என்று டென்ஷனாகி நாக்கை துறுத்தினார்.

நெல்லையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மனைவி பிரேமலதாவுடன் வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுகவின் இரு அணிகள் குறித்தும் முன்னாள் மற்றும் தற்போதைய முதல்வர் ஓபிஎஸ், ஈபிஎஸ் என்று யாரும் என்னிடம் கேட்காதீர்கள், நாட்டிற்கு ஏதாவது நல்லது நடக்கும் என்றால் மட்டும் பேசுங்கள், இவர்களால் எந்த நல்லதும் நடக்காது என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியின் செயல்பாடு குறித்த கேள்விக்கு டென்ஷன் ஆன விஜயகாந்த் 'என்ன அம்மா அம்மா அம்மா சும்மா அம்மானு யாராச்சும் சொன்னீங்க எனக்கு செம கோபம் வரும் என்று நாக்கை துறுத்தி ஒற்றை விரலால் மிரட்டினார். ஒ.பிஎஸ் அம்மா சமாதி முன்னாடி தியானம் பண்ணாரு என்று கைகளை கூப்பியவர் அதை அப்படியே விட்டு விட்டார் இதனால் அவர் என்ன சொல்ல வந்தார் என்பது தான் கடைசி வரை புரியவேயில்லை

 அறிவுப்பூர்வமா கேளுங்கள்

அறிவுப்பூர்வமா கேளுங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டதற்கு "வேறு ஏதாவது அறிவுப்பூரவமாக கேளுங்கள், ரஜினி என்னுடைய நல்ல நண்பர், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எதிர்ப்பு இருந்தால் தான் அரசியல், எதிர்ப்பினால தானே நானும் அரசியலுக்கு வந்தேன்" என்றார்.

 சட்டமன்ற தேர்தல்

சட்டமன்ற தேர்தல்

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னாடி சட்டசபை தேர்தல் வருவது நிச்சயம் என்ற அவர், உள்ளாட்சி தேர்தல் வருமா என்பது சந்தேகமே என்றார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் உண்மை என்றும் கூறினார்.

பழைய ஸ்டைல்

பழைய ஸ்டைல்

விஜயகாந்தின் இன்றைய செய்தியாளர்கள் பேச்சில் லேசாக அவரது பழைய பாணி திரும்பி வருவதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தவர் தொடர்ந்து அரசு மற்றும் ரஜினி பற்றி கேள்விகளே வந்ததால் நீங்க அறிவுப்பூர்வமா எதுவும் கேட்க மாட்டேன் என்கிறீர்கள் நான் புறப்படுகிறேன் என்று கைகளை கூப்பி வணக்கம் சொல்லிவிட்டு சென்றார்.

 டென்ஷன் டென்ஷன்

டென்ஷன் டென்ஷன்

ஓ.பன்னீர்செல்வம் அணியின் செயல்பாடு குறித்த கேள்விக்கு டென்ஷன் ஆன விஜயகாந்த் 'என்ன அம்மா அம்மா அம்மா சும்மா அம்மானு யாராச்சும் சொன்னீங்க எனக்கு செம கோபம் வரும் என்று நாக்கை துறுத்தி ஒற்றை விரலால் மிரட்டினார். ஒ.பிஎஸ் அம்மா சமாதி முன்னாடி தியானம் பண்ணாரு என்று கைகளை கூப்பியவர் அதை அப்படியே விட்டு விட்டார் இதனால் அவர் என்ன சொல்ல வந்தார் என்பது தான் கடைசி வரை புரியவேயில்லைஓ.பன்னீர்செல்வம் அணியின் செயல்பாடு குறித்த கேள்விக்கு டென்ஷன் ஆன விஜயகாந்த் 'என்ன அம்மா அம்மா அம்மா சும்மா அம்மானு யாராச்சும் சொன்னீங்க எனக்கு செம கோபம் வரும் என்று நாக்கை துறுத்தி ஒற்றை விரலால் மிரட்டினார். ஒ.பிஎஸ் அம்மா சமாதி முன்னாடி தியானம் பண்ணாரு என்று கைகளை கூப்பியவர் அதை அப்படியே விட்டு விட்டார் இதனால் அவர் என்ன சொல்ல வந்தார் என்பது தான் கடைசி வரை புரியவேயில்லை

English summary
DMDK President Vijayakanth gets angry over Questions about EPS and OPs and warned don't say Amma, Amma hereafter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X