எம்ஜிஆர் இருக்கும் போதே அதிமுகவை அழித்த நினைத்தார்கள்... திமுக மீது பொன்.ராதா பாய்ச்சல்
எம்ஜிஆர் இருந்த போதே அதிமுகவை அழிக்க திமுக முயற்சித்ததாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
கன்னியாகுமரி: எம்ஜிஆர் இருந்த போதே அதிமுகவை அழிக்க திமுக முயற்சித்ததாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பாஜகவுக்கு சாதகமான நிலை உருவாகி இருக்கிறது. தமிழகத்தில் நல்ல ஆளுமை வருவதை திமுக விரும்பாது. ஒரு கட்சியை அழிக்கும் முயற்சியில் திமுக இறங்கி இருக்கிறது.
எம்ஜிஆர் ஆட்சி காலத்திலேயே அதிமுகவை அழிக்க நினைத்தார்கள் அது முடிய வில்லை. பத்திரிகையாளர்களின் உரிமைகள் மீது அழுத்தம் கொடுப்பது ஜனநாயகத்தை அழிக்கும் நிலைதான்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. இது பாஜகவின் காலம். உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும், இரண்டு கட்சிகளும் இல்லாமல் போய் விட்டது. டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் அரசியல் தந்திரம்.
2014-ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜ.க. தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. தமிழகத்தில் பாஜக ஆள வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். தமிழக பெண்கள் குறித்த கேரள அமைச்சர் மணியின் பேச்சு கண்டிக்கத்தக்கது. சிவகங்கை மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி பணியில் இருந்த அதிகாரி திறமையானவர் என்பதால் மக்கள் அவரை விரும்புகின்றனர்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.