விவசாயிகளின் உயிரை பறித்தவர்கள்..விவசாயிகளின் துரோகி, விரோதி திமுக.. பிரித்து மேய்ந்த எச்.ராஜா!
விவசாயிகளின் உயிரை பறித்தவர்கள் திமுகவினர் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சாடியுள்ளார்.
சென்னை: துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் வராமல் பூக்களா வரும் என கேட்டவர்கள் திமுகவினர் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளின் உயிரை பறித்தவர்கள் திமுகவினர் என்றும் எச்.ராஜா சாடியுள்ளார்.
சென்னை சிஐடி நகரில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அக்கட்சி சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த ஸ்டாலினுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார். விவசாயிகளின் உயிரை பறித்தவர்கள் திமுகவினர் என்றும் எச்.ராஜா சாடினார்.
துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் வராமல் பூக்களா வரும் என கேட்டவர்கள் திமுகவினர் என்றும் அவர் கூறினார். உச்சநீதிமன்த்தில் காவிரி வழக்கை வாபஸ் பெற்றவர் கருணாநிதி என்றும் எச்.ராஜா சாடினார்.
மேலும் விவசாயிகளின் உயிரை பறித்தவர்கள் திமுகவினர் என்று கூறிய எச்.ராஜா திராவிட முன்னேற்ற கழகத்தினர் விவசாயிகளின் துரோகி, விரோதி என்றும் சாடினார்.