இவர்தான் "முரட்டு பக்தர்" தூத்துக்குடி என். பெரியசாமி
கருணாநிதியால் முரட்டு பக்தர் என்று அழைக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என். பெரியசாமியின் வாழ்க்கை குறிப்பு இதோ..
சென்னை: திமுக மாவட்ட செயலாளர் என். பெரியசாமி காலமானார். உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் பிரிந்தது.
• தூத்துக்குடி மாவட்டம் தட்டார் மடத்தில் பிறந்தவர் என். பெரியசாமி.
• சிறு வயது முதல் அரசியலில் ஈடுபாடு கொண்ட இவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
• 1976 ஆம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்பட்ட போது மிசாவில் கைதாகி சிறை சென்றவர்
• 1979ம் ஆண்டு திமுக வட்ட பிரதிநிதிக்கான தேர்தலில் போட்டி வென்றார்
• 1986ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகள் திமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளராக பணியாற்றினார்.
• கட்சி ரீதியாக மாவட்டம் பிரிக்கப்பட்ட போது தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றார்.
• திமுகவின் உயர்திட்டக் குழுவின் உறுப்பினராக இருந்தவர்.
• 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிகளில் வெற்றி பெற்று
தூத்துக்குடி எம்எல்ஏவாக பணியாற்றினார்.
• 1996ம் ஆண்டு நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
• இவரது மகள்தான் தற்போது தூத்துக்குடி எம்எல்ஏவாக உள்ள கீதா ஜீவன்
• 'முரட்டு பக்தன்' என கருணாநிதியால் அழைக்கப்பட்டவர் என். பெரியசாமி.
• 2017ம் மே 26ம் தேதி நுரையிரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியசாமி காலமானார்.