For Daily Alerts
Just In
தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் ஊழலற்ற, கமிஷனற்ற அரசை வழங்குவோம்: மு.க.ஸ்டாலின்
கோவை: தி.மு.க.வுக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் ஊழலற்ற அரசை வழங்குவோம் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
2-வது கட்ட நமக்கு நாமே பயணத்தில் இன்று மேட்டுப்பாளையம் பகுதியில் ஸ்டாலின் நடைபயணம் சென்றார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது:
ஆளும் அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் செயலிழந்துவிட்டது. இந்த ஆட்சியில் மக்களின் துயரம்தான் அதிகரித்துள்ளது.
முந்தைய 2006-11ஆம் ஆண்டு தி.மு.க. ஊழலற்ற நல்லாட்சியை வழங்கியது. அதேபோல் 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு நீங்கள் வாக்களித்தால் ஊழலற்ற, கமிஷனற்ற அரசை நடத்துவோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
Comments
English summary
DMK leader MK Stalin Thursday said if the party is voted to power, it would provide a corruption free governance in TN.