For Daily Alerts
Just In
வைகோவை கொலை செய்ய திமுக திட்டம்: முத்தரசன் பகீர் குற்றச்சாட்டு
சென்னை: மதிமுக பொதுச் செயலாளரும் தேமுதிக-தமாகா- மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோவை கொலை செய்ய திமுகவினர் முயற்சித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன் இதுகுறித்து கூறியதாவது: திருவாரூரில் பிரசாரம் மேற்கொள்ள வந்த வைகோ மீது திமுகவினர் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். இதேநிலை நீடித்தால் திமுக கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி தேமுதிக, தமாகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் என்று 6 கட்சிகளைக் கொண்ட வலுவான கூட்டணியை வைகோ ஒருங்கிணைத்துள்ளதால், திமுக எரிச்சல் அடைந்துள்ளது. அதனால் அவருக்கு எதிராக திமுக தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.
Comments
English summary
DMK try to kill Vaiko, says CPI state secretary Mutharasan.
Story first published: Monday, May 2, 2016, 10:38 [IST]