உலகின் அத்தனை புத்திசாலிகளும் தமிழக அமைச்சரவையில்தான் உள்ளார்களோ.. டுவிட்டரில் ராமதாஸ் கிண்டல்
வைகை அணை ஆவியாவதை தடுக்க தெர்மோகூல் அட்டை போடும் திட்டத்தை டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக கிண்டல் அடித்து பதிவிட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நடக்கும் ஆட்சியையும், தமிழக அமைச்சர்களையும் பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் அடித்துள்ளார்.
வைகை அணையில் உள்ள நீர் ஆவியாவதை தடுக்க தெர்மோகூல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் இரவோடு இரவாக பதவியேற்பு என பல விஷங்களை கலாய்த்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசியல் சூழலை டாக்டர் ராமதாஸ் வெளுத்து கட்டியுள்ளது இதோ உங்களுக்காக...
|
புத்திசாலி அமைச்சர்கள்
வைகை அணை ஆவியாவதை தடுக்க தெர்மோகூல் அட்டை போடும் அமைச்சரின் திட்டம் தோல்வி-உலகின் அத்தனை புத்திசாலிகளும் தமிழக அமைச்சரவையில்தான் உள்ளார்களோ?
|
இருட்டு வேலை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் இரவோடு இரவாக பதவியேற்பு: செய்தி- இருட்டு வேலை செய்பவர்களுக்கு இது தானே வழக்கம்!
|
கூட்டுக் கொள்ளை
அதிமுகவின் இரு அணிகளும் இணைகின்றன: செய்தி - இதுவரை நடந்தது கொள்ளை... இனி நடக்கப்போவது கூட்டுக்கொள்ளை!
|
புலியை முறத்தால்…
மதுக்கடைக்கு எதிர்ப்பு. இரும்புக்கதவை உடைத்த பெண்கள்: புலியையே முறத்தால் அடித்து துரத்திய தமிழ்ப் பெண்களுக்கு மதுக்கடைகள் எம்மாத்திரம்!
|
காற்றில் போதே..
பொதுப்பணித்துறையில் பணம் வாங்கிக்கொண்டு ஒரே நாளில் 214 பொறியாளர்கள் இடமாற்றம்: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வது இதுதானா முதல்வரே!
|
பட்டமளிப்பு விழா
துணைவேந்தரை நியமிக்காமல் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கூடாது!