திமுக புகார்: சசி அதிமுக ஆதரவு சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எந்த நேரத்திலும் மாற்றம்?
திமுக புகாரைத் தொடர்ந்து சசிகலா அதிமுக ஆதரவு சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எந்த நேரத்திலும் இடம் மாற்றம் செய்யப்படக் கூடும்.
சென்னை: திமுக புகாரைத் தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் நடைபெறும் நிலையில் சசிகலா அதிமுக ஆதரவு சென்னை போலீஸ் கமிஷனரை மாற்ற கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக செய்தது. இப்புகாரை ஏற்றுக் கொண்டது தேர்தல் ஆணையம்.
இதனடிப்படையில் சென்னைக்கு புதிய போலீஸ் கமிஷனர்களாக நியமிக்க தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. அத்துடன் போலீஸ் கமிஷனராக யாரை நியமிக்கலாம் என்ற பரிந்துரை பட்டியலையும் தேர்தல் ஆணையம் தமிழக அரசிடம் கோரியிருந்தது.
தமிழக அரசும் இதனை ஏற்று ஜே.கே. திரிபாதி உட்பட 3 பேரை சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்க பரிந்துரை அனுப்பியுள்ளது. இதனால் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எந்த நேரத்திலும் மாற்றப்படக் கூடும் என கூறப்படுகிறது.
நிலுவை வழக்குகள் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்டு வருகிறார் ஜார்ஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.