For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.. மோடிக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மேகதாது அணை உட்பட தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் கர்நாடக அரசின் எந்த திட்டத்திற்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

edappadi palanisamy letter to pm modi

மேலும், தமிழகத்தை பாதிக்கும் கர்நாடகாவின் எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி அளிக்க கூடாது. ரூ.5,912 கோடியில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியை பெற மத்திய நீர்வள ஆணையத்தை அணுகவும் கர்நாடகா திட்டமிட்டுள்ளது.

மேகதாது உள்ளிட்ட எந்த அணை திட்டத்துக்கும் அனுமதி அளிக்க வேண்டாம் என்றும், அணைகட்ட அனுமதி பெற மத்திய நீர்வள ஆணையத்தை அனுக கர்நாடக திட்டமிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காவிரி பிரச்சனை குறித்து பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது,மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது தன்னிச்சையானது. சக வடி நில மாநிலங்களின் ஒப்புதலை பெறாமல்,அணைக்கட்டுக்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே மேகதாதுவில் அணைகட்டுவதை நிறுத்த உத்தரவிட வேண்டும்.மேலும் அணை கட்டுவதற்கான தொழில்நுட்ப அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது." என எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில் பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

English summary
Central govt should not allow mekedatu dam project,Tamilnadu chief minister edappadi palanisamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X