For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ3, 000 கோடியில் கிராமங்களுக்கு இன்டர்நெட் வசதி: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

மூன்றாயிரம் கோடி ரூபாய் செலவில் கிராமங்களுக்கு இன்டர்நெட் சேவை அளிக்கும பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மூன்றாயிரம் கோடி ரூபாய் செலவில் கிராமங்களுக்கு இன்டர்நெட் சேவை அளிக்கும பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதற்காக முதற்கட்டமாக 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015ஆம் ஆண்டு பைபர் நெட் கார்ப்ரேஷன் எனும் தனி அமைப்பு உருவாக்கப்பட்டு பாரத் நெட் திட்டம் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை அளிக்கப்படும் என 110 விதியின் கீழ் அறிவித்தார்.

Edappadi palanisamy says that Bharath net service will be implemented soon

அவரது மறைவுக்குப் பிறகு தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி மூன்றாயிரம் கோடி ரூபாய் செலவில் தமிழக கிராமங்களுக்கு இணையதள வசதி அளிக்கும் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பைபர் கார்ப்பரேஷன் என்ற அமைப்பு தொடங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் உதவியோடு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் விதமாக ரூ.50 லட்சம் நிதி முதற்கட்டமாக ஒதுக்கப்படும் என்றும் பழனிசாமி தெரிவித்தார். முன்னதாக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

English summary
Edappadi palanisamy says that Bharath net sevice will be implemented soon. Due to this bharath net service villages will get internet soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X