முட்டை வாங்கியதில் ஊழல்: தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: முட்டைக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக ஒப்பந்ததாரர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்ட முட்டை ஒப்பந்தக்காரர் எம்.ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கமிட்டியால் நிர்ணயிக்கப்படும் விலைக்கு மாறாக தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் சட்ட விதிகளுக்கு மாறாக நிபந்தனைகளை திருத்தி அனுபவம் இல்லாத முன்பே கர்நாடகா அரசால் கருப்பு பட்டியலில் வைக்கப் பட்ட இரண்டு நிறுவங்களுக்கு, உள் நோக்கத்தோடு, உரிமம் வழங்கி இருப்பதால் அவைகளை ரத்து செய்ய வேண்டும்.
இதனால் ஒரு முட்டைக்கு 98 பைசாவில் இருந்து 1 ரூபாய் 75 காசுகள் வரை அதிக விலை கொடுத்ததால் பத்து கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு 2 வார காலஅளவிற்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசின் தலைமைச் செயலாளர், ஒருங்கிணைந்த குழந்தைககள் வளர்ச்சி திட்ட இயக்குநருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.