For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின்சார வயரை கடித்து தற்கொலை செய்ய முடியுமா? எலக்ட்ரிக்கல் ஊழியரின் கேள்விகளை பாருங்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சுவாதி கொலை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ராம்குமார் புழல் சிறையில் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் அறிவித்தனர்.

இந்நிலையில், மின்சார வயர் குறித்த சில தொழில்நுட்ப கேள்விகளை Kastro Harshith என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கேட்டுள்ளார். ராம்குமாரு ஒரு டவுட்டூடூடூடூடூ ... என்ற தலைப்பில் ஆரம்பிக்கும் அந்த பேஸ்புக் போஸ்டில் அவர் கூறியிருப்பதாவது:

Electrical department employee raise doubts on Ramkumar suicide

நானும் ஒரு 15 ஆண்டுக்கு மேலாக மின் மற்றும் மின்னனு துறையில் தொழில் செய்யுறேன். நான் ஒரு 1.5 Mm ஒயரை கொரடு இல்லா நேரத்தில் ,பல்லால் அதை துண்டிக்க என் பல்லும் வாயும் படும் பாடு சொல்லி மாளாது வலி.

சரி சிறையோ புதுசு, எப்புடியும் அடுப்படியில ஒரு 2.5 Or 4.mm டபுள் இன்சுலேட் ஒயர்தான் பயன்படுத்தபட்டு இருக்கும். அதை கடித்து காயபடுத்துவது என்பது குதிரை கொம்பு.

அப்புடியே அவன் கடித்திருந்தாலும் புது சிறை என்பதால் MCB. ELCB போன்ற தானியங்கி ட்ரிப்பர் கண்டிப்பாக இருந்திருக்கும். ஷாக் அடித்தவுடன் மின் இணைப்பு துண்டித்திருக்கும், உயிர் சேதம் நிகழ வாய்ப்பில்லை.

சரி ஒரு வேளை கிச்சன்ல 180Mm உயர் மின் கேபிள் போட்டுருப்பாங்களோ!! அதை கடிக்க முடியாதே. ராம்குமார் பல்லு என்ன ஒயர் கட்டரா? இல்லை கட்டிங் ப்ளேயாரா? டவுட்டை கிளியர் பன்னுங்க தஅ போலிஸ் சர்கார்..

இவ்வாறு கூறுகிறது அந்த மெசேஜ்.

English summary
An electrical department employee raise doubts in his Facebook post on Ramkumar suicide incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X