ஒன்னு அப்படி, இல்லன்னா இப்படி: என்னம்மா சென்னை இப்படி இருக்கேம்மா!
சென்னை: குளிர்காலத்தில் ஊட்டி, வெயில்காலத்தில் சஹாரா, மழைக்காலத்தில் வெனிஸ். இது தான் சென்னையின் அழகு என ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை கொட்டியதும், கொட்டியது சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் திணறுகிறார்கள்.
இந்நிலையில் ட்விட்டரில் பலர் சென்னை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
|
மோடி
அசோக் சங்கால் மறைவுக்கு 3 ட்வீட் போட்டுள்ளார் மோடி. சரி. ஆனால் சென்னை வெள்ளம் பற்றி ஏன் ஒரு ட்வீட் கூட போடவில்லை? 80 பேர் பலியாகியுள்ளனர். #Shame என பாராஸ் தெரிவித்துள்ளார்.
|
தண்ணீர்
ஊரெல்லாம் தண்ணீரில் இறந்தாலும் எங்களுக்கு இந்த தண்ணீர் தான் முக்கியம் #chennairains #ChennaiFloods என்கிறார் நவி.
|
சென்னை
குளிர்காலத்தில் ஊட்டி, வெயில்காலத்தில் சஹாரா, மழைக்காலத்தில் வெனிஸ். இது தான் சென்னையின் அழகு என்கிறார் மாயங்க்.
|
காவிரி
காவிரி பிரச்சனையை கூட காமெடி செய்துள்ளதை ட்வீட் செய்துள்ளார் ஏலியன்.
|
அரசு பள்ளிகள்
எதிர்காலத்தில் உங்களின் கடந்தகாலத்திற்கும் மதிப்பு கொடுங்கள் #ChennaiFloods என ஆண்டனி அஜய் தெரிவித்துள்ளார்.