For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக மட்டும்தான் 2 முறை பிரிந்து மீண்டும் இணைந்த ஒரே கட்சி.. முதல்வர் பெருமிதம்

பிரிவால் ஆதாயம் தேடியோருக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளோம் என்று இரு அணிகள் இணைப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: இரண்டு முறை உடைந்து பின் இணைந்த ஒரே கட்சி அதிமுகதான் என்று இணைப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் ஏற்பட்டன. நீண்ட இழுபறி பேச்சுக்கு பின்னர் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஒருவழியாக இன்று பல்வேறு சின்ன சின்ன தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்களான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து 2 அணிகளும் இணைந்தன.

தொண்டர்களின் எண்ணப்படி இணைப்பு

தொண்டர்களின் எண்ணப்படி இணைப்பு

பின்னர், இணைப்பு நிகழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி பேசியதாவது: இந்தக் கட்சி மீண்டும் இணையும் உயர்ந்த எண்ணத்தில் ஈடுபட்டோம். நாங்கள் உறுதியாக இருந்ததால் இணைப்பு சாத்தியமாகியுள்ளது. அனைத்துத் தொண்டர்களின் எண்ணத்தின் விருப்பத்தை ஏற்று நாங்கள் இணைந்துள்ளோம்.

இணைந்த வரலாறு கிடையாது

இணைந்த வரலாறு கிடையாது

இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. அந்தக் கட்சிகள் எல்லாம் பிரிந்த பின்னர் இணைந்த வரலாறு கிடையாது. அதிமுக மட்டும்தான் மக்களோடு மக்களாக இருந்து, கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், அவற்றைப் பேசி தீர்த்து ஒற்றுமையை ஏற்படுத்தி கட்சியை வலுவாக்கியுள்ளோம்.

சம்மட்டி அடி

சம்மட்டி அடி

அதிமுகவில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்திக் கொண்டு இடையில் புகுந்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தவர்களுக்கெல்லாம் சம்மட்டி அடி கொடுத்துள்ளோம். எவ்வளவு கருத்து வேறுபாடு வந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் லட்சியங்களை நிறைவேற்ற ஒன்றிணைந்துள்ளோம்.

Recommended Video

    அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன-வீடியோ
    சூளுரை

    சூளுரை

    இன்று முதல் எந்தச் சூழ்நிலையிலும், கருத்து வேறுபாடு வந்தாலும், இணைந்து செயல்படுவோம். அதனைத் தொடர்ந்து நிர்வாகிகளின் பெயர்களை அறிவித்தார் முதல்வர் பழனிச்சாமி.

    English summary
    No split us said Chief Minister Palanisamy in his merger speech in ADMK HQ.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X