இதை அடக்கும் "தில்" யாருக்கு உண்டு.. குழந்தையும் "போர்க்களத்தில்"!
ஜல்லிக்கட்டு போர்க்களத்தில் பிறந்த 2 மாதமே ஆன கைக்குழந்தையுடன் அதன் பெற்றோர் வந்திருந்தது அனைவரையும் நெகிழ வைப்பதாக அமைந்தது.
சென்னை: ஜல்லிக்கட்டு போர்க்களம் மெய் சிலிர்க்க வைக்கிறது. ஒவ்வொரு நாளும் திரண்டு வரும் மக்கள் கூட்டம், இளைஞர் பட்டாளம் ஒவ்வொருவரையும் தட்டி எழுப்பும் வகையில் உள்ளது.
சோம்பிக் கிடந்த ஒரு சமூகமே ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று வியாபித்து விஸ்வரூபம் காட்டி நிற்பதை உலகமே ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்க்கிறது.
இந்த போர்க்களத்தில்தான் எத்தனை எத்தனை நெகிழ்ச்சிக் காட்சிகள். இதோ ஒரு காட்சி.
Even our Tamil new born won't give up !!!#JusticeforJallikattu #JallikattuSlogans #SaveOurCultureJALLIKATTU #தமிழன்டா #Jallikattuprotest pic.twitter.com/RhE35AmgcT
— Vigneshvar (@vicky900025) January 18, 2017
பிறந்து 2 மாதமே ஆன கைக்குழந்தையுடன் அதன் அப்பாவும் அம்மாவும் ஜல்லிக்கட்டுப் போர்க்களத்தில் தனது இனத்தின் உரிமைக்காக குரல் கொடுத்த நெகிழ்ச்சிக் காட்சி.
இதைப் பார்க்கும்போது இந்த கூட்டத்தை அடக்கும் தில் யாருக்கு உண்டு என்ற கேள்விதான் ஓங்கி எழுகிறது மனதில்.