ராஜேந்திர பாலாஜி அமைச்சரா அல்லது எதிர்க்கட்சித் தலைவரா? பிராண்டிய ஈவிகேஎஸ் இளங்கோவன்!
கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிகக்கை எடுக்காமல் இருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனத் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: ராஜேந்திர பாலாஜி அமைச்சரா அல்லது எதிர்க்கட்சித் தலைவரா என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சாடியுள்ளார். கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் முன்னால் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தனியார் பால் நிறுவனங்கள் மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், ராஜேந்திர பாலாஜி அமைச்சரா அல்லது எதிர்க்கட்சித் தலைவரா என நக்கலடித்தார். எதிர்க்கட்சி தலைவர்களை போல் குற்றம்சாட்டி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் என்றும் அவர் கூறினார்.
அமைச்சராக இருந்து கொண்டு கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமால் ஏன் குற்றம்சாட்டி வருகின்றார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். கடந்த 3 நாட்களாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.