For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசி சொன்னபடி ஆடுனா தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்தான் வரும்: கே.பி.முனுசாமி காட்டம்

சசிகலாவின் எண்ணப்படிதான் இப்போது தமிழக அரசு இயங்குகிறது என்றால், சட்டசபைத் தேர்தல் முன்கூட்டியே வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

By Devarajan
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் எண்ணப்படி ஆட்சி நடந்தால் முன்கூட்டியே தேர்தல் வருவதை தடுக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி காட்டமாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 Ex.Minister K.P.Munusamy said,TN Assembly election might come soon.

சசிகலாவின் எண்ணப்படி தமிழக அரசு இப்போது நடந்தால் அடுத்த தேர்தல் முன்கூட்டியே வருவதை யாரும் தடுக்க முடியாது. ஜெயலலிதாவின் எண்ணப்படி செயல்பட்டால் தான் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடைபெறும்.

சசிகலாவின் குடும்பம் முழுமையாக அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். அப்போதுதான் எந்தவொரு பிரச்சனையுமின்றி, இரு அணிகளும் இணைய முடியும், வலுவடைந்து அரசியலில் செயல்படமுடியும்.

இவ்வாறு முனுசாமி கூறினார்.

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஓ.பி.எஸ். அணியின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராக உள்ளார். இந்த நிலையில் தேர்தல் வரும் என்று முனுசாமியும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Ex.Minister K.P.Munusamy said in press meeting at krishnagiri ,Tamil Nadu Assembly election might come soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X