For Daily Alerts
Just In
பஞ்சு குடோனில் தீவிபத்து.... போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்: வீடியோ
கிருஷ்ணகிரி பழையபேட்டை பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டையில், பஞ்சு குடோனில் தீவிபத்து ஏற்பட்டதில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து நாசமானது. தீவிபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி பழையபேட்டையில், அப்துல் ரஹீம் என்பவர் தலையணை செய்யும் தொழில் செய்து வருகிறார். அதற்கு அப்பகுதிலேயே பஞ்சு குடோன் ஒன்றும் வைத்துள்ளார். இன்று காலை, பஞ்சு குடோனில் இருந்த இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் தீப்பிடிக்க ஆரம்பித்தது.
குடோனில் பஞ்சு இருந்ததால் தீப்பற்றி மளமளவென எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு உடனே தகவல் கூறினர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் அங்கு வேலை பார்த்த யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இந்த தீவிபத்தை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Comments
English summary
In krishnagiri, palaiyapet cotton godown got fired and tonnes of cotton became waste
Story first published: Tuesday, July 11, 2017, 16:33 [IST]