விழுப்புரம்... எண்ணை குடோனில் மின்கசிவால் தீவிபத்து.. சிலிண்டர்கள் தப்பின.. பேராபத்து தவிர்ப்பு!
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஒரு எண்ணை குடோனில் ஏற்பட்ட தீவிபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான கேஸ் சிலிண்டர்கள் துரித கதியில் அகற்றப்பட்டதால் பேராபத்து தவிர்க்கப்பட்டது.
அதிகாலையில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாலும், எண்ணை குடோன் என்பதாலும் அங்கு ஏராளமான கேஸ் சிலிண்டர்கள் இருந்ததாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் நகரில் சமையல் உள்ள ஒரு எண்ணை குடோனில் இன்று அதிகாலை 3 மணிக்கு மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் போனது.
குடோனில் பிடித்த தீ வேகமாக பற்றி எரிய ஆரம்பித்தது. இந்த நிலையில் அங்கிருந்த கேஸ் சிலிண்டர்களை வேகம் வேகமாக அப்புறப்படுத்தி பத்திரமான இடத்திற்கு கொண்டு சென்றனர். தீயணைப்புப் படையினரும் வேகமாக வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
துரித கதியில் தீயணைப்புப் படையினரும், குடோன் ஊழியர்களும் ஈடுபட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் தீவிபத்தால் குடோனுக்கு பெரும்சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.