For Quick Alerts
For Daily Alerts
Just In
ஆபத்தின் அறிகுறியா?: புதுக்கோட்டை அருகே ஹைட்ரோகார்பன் எரிவாயு குழாயில் பரவிய தீயால் பரபரப்பு
புதுக்கோட்டை அருகே வாணக்கன்காடு பகுதியில், ஏற்கனவே ஹைட்ரோகார்பன் சோதனைக்காக அமைத்த குழாயில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை: புதுக்கோட்டை அருகே, ஹைட்ரோகார்பன் திட்ட எரிவாயு குழாயில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அவ்வூர் மக்களும், பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்பது அவர்கள் வாதமாக உள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை அருகே வாணக்கன்காடு பகுதியில், ஏற்கனவே ஹைட்ரோகார்பன் சோதனைக்காக அமைத்த குழாயில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தீயை பார்த்ததும், பொதுமக்களே தண்ணீரை பயன்படுத்தி, தீயை அணைத்தனர். இந்த சம்பவம் சதியா அல்லது தற்செயலாக நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Comments
English summary
Fire took place at Hydrocarbon extraction plant in Pudukkottai district.
Story first published: Tuesday, February 28, 2017, 10:10 [IST]