For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்பெண்ணையாற்றில் வெள்ளம்- கிருஷ்ணகிரி உட்பட 5 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!

தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுவதால் கிருஷ்ணகிரி உட்பட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கிருஷ்ணகிரி உட்பட தென்பெண்ணையாற்று 5 கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது பொதுப்பணித்துறை.

தமிழகத்தில் பொதுவாக பல மாவட்டங்களில் கனமழை கொட்டுகிறது. அதேபோல் கர்நாடகாவிலும் கனமழை பெய்து வருகிறது.

Flood alert to 4 Districts along Thenpennai River

இதனால் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள ஓசூர் கெலவரப்பள்ளி அணை நிரம்பி வழிகிறது.

இதனால் அணைக்கு வரக்கூடிய நீர் அப்படியே தென்பெண்ணையாற்றில் திருப்பி விடப்படுகிறது. இதையடுத்து கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை,விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் ஆற்றை கடக்க முயற்சிக்கக் கூடாது எனவும் பொதுப்பணி துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

English summary
A flood alert has been issued to people living near the banks of the Thenpennai river in Krishnagiri, Dharmapuri, Villupuram, Tiruvannamalai and Cuddalore districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X