சென்ற திசையெல்லாம் வென்ற பெருமாளுக்கு தில்லியில் சறுக்கலாமே!... சுப. உதயக்குமார் கருத்து!!
நாகர்கோவில்: சென்ற திசையெல்லாம் வென்ற பெருமாளுக்கு தில்லியில் சிறுக்கலாமே என்று கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயக்குமார் டெல்லி சட்டசபைத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில் கிடைத்துள்ள பெரும் வெற்றிதான் இன்றைய முக்கிய செய்தி. ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து தமிழகத்தில் எளிய மக்கள் கட்சி என்ற பெயரில் செயல்பட்டவர் உதயக்குமார். கூடங்குளம் போராட்டக் குழுவின் முக்கிய நிர்வாகிகளும் இக்கட்சியில் இணைந்து செயல்பட்டனர்.
கடந்த லோக்சபா தேர்தலிலும் உதயக்குமார் உள்ளிட்டோர் எளிய மக்கள் கட்சி சார்பில் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். பின்னர் எளிய மக்கள் கட்சியிலிருந்து அனைவரும் விலகி வெளியேறி விட்டனர்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி குறித்து உதயக்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள கருத்தில், சென்ற திசையெல்லாம் வென்ற பெருமாளுக்கு தில்லியில் பெரும் சறுக்கலாமே? அடுத்த தில்லி முதல்வர் தோழர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் தோழர் மை.பா.நன்மாறனும், நானும்! (பழைய படம், எடுத்தவர்: ஸ்டீபன் அமிர்தராஜ்) என்று கருத்து தெரிவித்துள்ளார் உதயக்குமார்.