தமாகாவின் புதிய கொடியை அறிமுகப்படுத்தினார் ஜி.கே.வாசன்
திருச்சியில் நடைபெற்ற தமாகா கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் புதிய கொடியினை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிமுகப்படுத்தினார்.
திருச்சி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் மூத்த பத்திரிகையாளர் சோ. ராமசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழக மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசலின் அளவு 5 ஆயிரம் லிட்டராக உயர்த்தப்பட வேண்டும், கர்நாடக அரசு மேதாதுவில் அணைகட்டும் முயற்சியை மத்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும், ஜல்லிக்கட்டுக்காக மாணவர் நடத்திய போராட்டத்திற்கு பாராட்டு உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய கொடியை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசுகையில், இனி தமிழகத்தை ஆளப்போகும் கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் விளங்கும் என்றார்.