இரட்டை இலை யாருக்கு.. சென்னையில் ரூ.50 லட்சம் வரை சூதாட்டம்! போலீஸ் தீவிர கண்காணிப்பு
சசிகலா, மற்றும் ஓ.பி.எஸ். அணிகளின் பெயரில் லட்சம் லட்சமாக சூதாட்ட கும்பல் பணம் கட்டியுள்ளது. குறைந்தது ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரையில் சூதாட்ட கும்பல் பணம் கட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: இரட்டை இலை யாருக்கு என்பதை வைத்து, சென்னையில், ரூ.50 லட்சம் வரையில் சூதாட்டம் நடைபெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருவதால் இரு தரப்பும் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு முயற்சி செய்கிறார்கள்.
இரட்டை இலை யாருக்கு சொந்தம்? என்கிற விசாரணை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்னிலையில் இன்று நடைபெற்ற நிலையில், அது யாருக்கு கிடைக்கும் என்கிற விவாதமும் சூடு பிடித்துள்ளது.
இதனை மையமாக வைத்து சென்னையில் சூதாட்டமும் நடந்துள்ளது. சசிகலா, மற்றும் ஓ.பி.எஸ். அணிகளின் பெயரில் லட்சம் லட்சமாக சூதாட்ட கும்பல் பணம் கட்டியுள்ளது.
குறைந்தது ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரையில் சூதாட்ட கும்பல் பணம் கட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உளவு பிரிவு போலீசாரும், சென்னை போலீசாரும் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.