For Daily Alerts
Just In
தாம்பரம் ரயில்நிலையத்தில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு.. பயணிகள் பீதி
தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் சூட்கேசில் இருந்த ஜெலட்டின குச்சிகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் ரயில் பயணிகள் பீதி அடைந்தனர்.
தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் இன்று வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மூடப்பட்ட நிலையில் ஒரு மர்ம சூட்கேஸ் கிடந்தது. இதுகுறித்து அங்கிருந்த பயணிகள் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பெட்டியில் இருந்த ஜெலட்டின் குச்சிகளை ரயில்வே போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
Railway police seized a suitcase full of gelatin sticks, probe going on.
Story first published: Tuesday, March 28, 2017, 10:45 [IST]