பலாத்காரம் செய்து கழற்றி விட்ட காதலன்... கடத்தல் டிராமா போட்ட காதலி.. தூத்துக்குடி அருகே பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பலாத்காரம் செய்து ஏமாற்றிய காதலனை திட்டம் போட்டு போலீசில் சிக்க வைத்துள்ளார் கல்லூரி மாணவி ஒருவர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராமன்புதூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து திரும்பி தன்னை மயங்க மருந்து ஸ்பிரே அடித்து ஓருவர் காரில் கடத்தி சென்று, பலத்காரம் செய்ததாக தெரிவித்தார். பின்னர் தன்னை மிரட்டி பழைய பஸ் நிலையத்தில் விட்டு விட்டு சென்று விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக அவரை நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், திவ்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது திவ்யாவின் வாக்குமூலத்தில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேற்கொண்டு நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்ட அம்மாணவி, திசையன்விளை அருகே உள்ள தனியார் கல்லூரி ஊழியரனா ஜோ என்பவரைக் காதலித்து வந்தது தெரியவந்தது.
இருவரும் தூத்துக்குடியில் ஹோட்டல், ஷாப்பிங் என்று சுற்றியுள்ளனர். அங்கு டவுனில் உள்ள ஓரு தியேட்டருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். படம் முடிந்த பின்னர் அவரை பஸ் நிலையத்தில் விட்டு விட்டு சென்ற ஜோ வெகுநேரமாகியும் வரவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அம்மாணவி, காதலனை பிடிப்பதற்காக கடத்தல் நாடகம் ஆடியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காதலன் ஜோ மீது போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.