For Daily Alerts
Just In
கிரானைட் மோசடி: மேலூர் நீதிமன்றத்தில் பி.ஆர். பழனிச்சாமி ஆஜர்!
கிரானைட், தாது மணல் முறைகேடு குறித்து டிராஃபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அது பற்றி விசாரித்த உயர் நீதிமன்றம், சகாயம் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட அடுத்த நாளே மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணி, பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மனைவி, மகன் உட்பட அவரது குடும்பத்தினர் மீது மேலும் புதிதாக 10 வழக்குகளை அவசரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், கிரானைட் கற்களை சட்டவிரோதமாக அடுக்கி வைத்த வழக்கில் பி.ஆர்.பழனிச்சாமி இன்று மதுரை மேலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Comments
English summary
PRP granites owner P.R.Palanisamy Today appeared in Melur Court for Granite scam case.