For Quick Alerts
For Daily Alerts
Just In
ஊதிய உயர்வு கோரி தொடர் வேலை நிறுத்தம்! அரசு கவனத்தை ஈர்க்க கஞ்சி தொட்டி திறக்க முடிவு!!
நாமக்கல்: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தங்களை கண்டுகொள்ளாத தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கஞ்சி தொட்டி திறக்கப்படும் என்று விசைத்தறி தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் 35% ஊதிய உயர்வு கோரி கடந்த மாதம் 26-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் 8 நாட்களாக நீடித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகமோ, அரசோ தங்களை கண்டுகொள்ளவில்லை. இதனால் அரசின் கவனத்தை ஈர்க்க கஞ்சித் தொட்டி திறக்கப் போகிறோம் என விசைத்தறி தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் பள்ளிப்பாளையம் உள்ளிட்ட 10 இடங்களில் கஞ்சித் தொட்டி திறக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
A large number of handloom workers in Namakkal district seeking a hike in wages.
Story first published: Monday, May 4, 2015, 13:03 [IST]