For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பசலனம் காரணமாக வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கேயும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heavy rain forecast in tamilnadu for next 24 hours

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், ''வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.

தென்தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்'' என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. திண்டுக்கல், தேனி உள்ளிட்ட இடங்களிலும் மழை இரவில் சிறிது நேரம் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளுமை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

English summary
The chennai Meterological Department has said,Heavy rain forecast in tamilnadu and pudhucherry for next 24 hours
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X