For Daily Alerts
Just In
புதிய காற்றழுத்தம்...தென் கடலோர பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இந்தியப் பெருங்கடலில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு துவங்கி உள்ளது.
இதுகுறித்த செய்தியில், "காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால் தென் கடலோர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரங்களுக்குள் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments
English summary
Tamil Nadu will become rainy after 24 hours, Chennai Metrological centre says.
Story first published: Wednesday, November 26, 2014, 14:34 [IST]