அதகளம்...திராவிட நாடு உருவானால் இதுதாங்க கிரிக்கெட் டீம்! நெட்டிசன்கள் குசும்பு #dravidanadu
சென்னை: தென் இந்தியாவின் கலாசாரம், பண்பாடு, உணவு பழக்கங்களின் மீது மத்திய அரசுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாக குற்றம்சாட்டும் தமிழகம், கேரள மாநில நெட்டிசன்கள் திராவிட நாடு என்ற பெயரில் ஹேஷ்டேக் போட்டு கருத்து கூறி வருகிறார்கள்.
அப்படி தெற்கிலுள்ள 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவை அடங்கிய தனி திராவிட நாடு உருவாவதாக ஒரு கற்பனை செய்தால், அந்த நாட்டுக்கு ஒரு கிரிக்கெட் அணி வேண்டுமல்லவா. அப்படி உருவான கற்பனை அணியை பாருங்கள். முழுக்க தென் இந்திய கிரிக்கெட் வீரர்களை வைத்து இப்படி ஒரு பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அணி கேப்டன் முரளி விஜய். விக்கெட் கீப்பர் கர்நாடகாவை சேர்ந்த ராபின் உத்தப்பா. ஆர்.அஸ்வின், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, விஜய் சங்கர், பசில் தாம்பி, ஸ்டூவர்ட் பின்னி, வினய்குமார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்த அணியில் இருப்பார்களாம்.
நாட்ட பிரிச்ச வேகத்துல கிரிக்கட் டீம் ரெடி பண்ணிடானுக 😂 அதானே நமக்கு எல்லாமே #dravidanadu pic.twitter.com/Zn3uQhbyXb
— இராஜேஸ் வீரா (@Rajeshveeraa) May 29, 2017
திராவிட நாடு தலைநகரம் சென்னையாக இருக்குமாம். முதல்வர் பினராயி விஜயன் (பிரதமர்??), அலுவலக மொழிகள் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடமாக இருக்குமாம். பேங்க் ஆப் திராவிடா என வங்கி உருவாக்கப்படும். அரசு விழாவாக பொங்கல் பண்டிகை இருக்கும் என்கிறது இந்த டிவிட்.