For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாவோயிஸ்ட் தாக்குதலால் பலியான தமிழக வீரர் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி: வீடியோ

சத்திஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலால் பலியான தமிழக வீரரின் உடலுக்கு உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் அஞ்சலி செலுத்தினார்.

Google Oneindia Tamil News

சேலம்: சத்தீஷ்கர் மாநிலம், ராய்ப்பூரில் நக்சலைட்டுகள் தாக்குதலின் போது உயிரிழந்த கெங்கவல்லி வட்டம், நல்லூர், திட்டச்சேரியை சார்ந்த திருமுருகனின் உடலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

சத்தீஷ்கர் மாநிலம், ராய்ப்பூரில் மாவோயிஸ்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையினை சேர்ந்த 25 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், நல்லூர் திட்டச்சேரி பகுதியை சேர்ந்த என்.திருமுருகன் பலியானார்.

Higher Education Minister pays tribute to Martyrs body

இதனை தொடர்ந்து, அவரது உடல் சேலம் திருச்சிக்கு விமானத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊரான திட்டச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

சொந்த ஊரில் அஞ்சலிக்காக திருமுருகனின் உடல் வைக்கப்பட்டது. தமிழக அரசின் சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், திட்டச்சேரிக்கு சென்று திருமுருகன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், வீரரின் குடும்பத்தாரிடம், தமிழக முதல்வர் அறிவித்த 20 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையினை வழங்கினார்.

English summary
Higher Education Minister K P Anbalagan paid tribute to Martyrs body Thirumurugan at Thittacherry in Salem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X