For Daily Alerts
Just In
தென்காசியிலிருந்து பஸ்ஸில் கஞ்சா கடத்திய கணவன், மனைவி கைது!
தென்காசி: தென்காசியில் இருந்து கேரளாவுக்கு பேருந்தில் 2 கிலோ கஞ்சா கடத்திய கணவன், மனைவி தென்மலையில் கைது செய்யப்பட்டனர்.
தென்காசியில் இருந்து கேரள மாநிலம் அடூருக்கு அம்மாநில பேருந்து ஓன்று தென்மலை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை அம்மாநில காவல்துறையினர் மறித்து சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வண்ணம் இருந்த ஒரு ஆண், பெண் ஆகிய இருவரை விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னதின் அடிப்படையில் அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.
அந்த சோதனையில் பையில் 2 கிலோ கஞ்சா வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் அடூரை சார்ந்த பிரதீப், கீதா என்பதும் கணவன், மனைவி என்றும் தெரிய வந்தது.
Comments
English summary
Kerala based Husband and wife were arrested near Tenkasi, for smuggling Ganja in a govt bus.
Story first published: Wednesday, January 28, 2015, 17:14 [IST]