லோக்சபா துணை சபா தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் மீது செந்தில்பாலாஜி பாய்ச்சல்
கரூர்: கரூர் வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும், அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரும்தான் முட்டுக்கட்டை போடுகின்றனர் என அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கூறிய குற்ற்ச்சாட்டுக்கு, நான் பேச்சுவார்த்தைக்கு தயார் என எம்.ஆர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார்.
கரூர் வாங்கல் குச்சிபாளையத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்தார். அதன்படி, அங்கு அடிக்கல்லும் நாட்டினார்.
அவர் மறைவுக்குப் பிறகு, அங்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்ட லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரும் தடை செய்கின்றனர் என தன் கட்சியினர் மீதே அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்.
மேலும், வாங்கல் குச்சிபாளையத்தில் திட்டமிட்டபடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கவில்லயெனில், 28ஆம் தேதி கரூர் தாலுகா அலுவலகம்முன்பு உண்ணாவிரதம் இருப்பேன் என செந்தில் பாலாஜி அறிவித்தார்.
இந்நிலையில், செந்தில்பாலாஜியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொன்ன எம்.ஆர் விஜய்பாஸ்கர்,அவருடைய உறவினர்கள் அப்பகுதியில் நிலம் வைத்திருப்பதால் தான் அங்கு மருத்துவக் கல்லூரி வர வேண்டுமென செந்தில் பாலாஜி கூறிவருகிறார். இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தைக்கு நான் தயார் என அவர் கூறினார்.