For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம் - கமல்ஹாசன்

தமிழ் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும் தமிழ் நாட்டை ஆளலாம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ் உணர்வோடு இருக்கும் எல்லோரும் தமிழர்தான். தமிழ் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் பற்றி இன்று செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசினார். அப்போது இன்றைய அரசியல் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

நல்ல சம்பளம்

நல்ல சம்பளம்

தற்போது உள்ள சூழ்நிலையில் யாருமே அரசியலுக்கு வரக்கூடாது என்றார். பணம் சம்பாதிக்க அரசியல் ஒரு வழியல்ல என்றும் கூறினார். எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கு நல்ல சம்பளம் தரவேண்டும் என்றும் கூறினார்.

நான் தமிழநான் தமிழன்ன்

நான் தமிழநான் தமிழன்ன்

நான் பல ஆண்டுகளாகவே அரசியலில் இருக்கிறேன். ஓட்டு போட ஆரம்பித்தது முதலே நான் அரசியல்வாதிதான் என்றார். தமிழ் உணர்வோடு இருக்கும் எல்லோரும் தமிழர்தான், நான் தமிழன், இந்தியன்தான் என்றும் கமல் கூறினார்.

யார் வேண்டுமானாலும் ஆளலாம்

யார் வேண்டுமானாலும் ஆளலாம்

தமிழ் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்றும் கமல் தெரிவித்தார். நான் இந்தியனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனவும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

டுவிட்டர் அரசியல்

டுவிட்டர் அரசியல்

நடிகர் கமல் கடந்த சில மாதங்களாகவே டுவிட்டரில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். ஜல்லிக்கட்டு பிரச்சினையில் இருந்து பல போராட்டங்களுக்கு கருத்து கூறியுள்ளார். அவர் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரோ கேமராவிற்கு முன்பு தவிர வேறு எங்கும் தனக்கு நடிக்கத் தெரியாது என்றார். இப்போது ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி பொதுப்படையான கருத்து கூறியுள்ளார் கமல்ஹாசன்.

English summary
Kamal Haasan had held press conferences when agitations gained momentum. Despite many criticising his move as a 'political one', Kamal Haasan had taken to Twitter to justify his stance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X