இங்க பாருங்கோ.. இங்கே பாருங்க... கருப்பு பணம் என்கிட்ட இல்லையே.....இரு கையை தூக்கி சொன்ன விஜயகாந்த்
'என்கிட்டே கருப்புபணமெல்லாம் எதுவுமே இல்லை' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் நெல்லையில் கூறியுள்ளார்.
நெல்லை: தம்மிடம் கறுப்புப் பணம் எதுவுமே இல்லை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நெல்லையில் கூறியுள்ளார்.
நெல்லையில் தேமுதிக பிரமுகர் இல்ல திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் விஜயகாந்த். அவருடன் அவரின் மனைவி பிரேமலதாவும் வந்திருந்தார். திருமண நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் விஜயகாந்த்.
அப்போது அவர் கூறுகையில், " தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வரும். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பில்லை என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு.
ஊழல் செய்பவர்கள் எல்லாம் வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். விஜயமல்லையா மாதிரி இப்போது கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் பதுங்கியுள்ளார். இதானே இந்தியாவில் வழக்கமாக இருக்கிறது." என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது செய்தியாளர் ஒருவர் 'கறுப்புப்பணம்' குறித்து கேள்வி எழுப்பினார். அவர் முடிக்கும் முன்பே தன் கையைத் தூக்கிய விஜயகாந்த் ' என்கிட்டே கருப்புபணமெல்லாம் இல்லை ' என்று கூறினார். சிறிதுநேரம் மற்றும் பேட்டியளித்த விஜயகாந்த் பேச்சு பெரும்பாலும் புரியவில்லையே என்று செய்தியாளர்கள் புலம்பிக்கொண்டே சென்றுள்ளனர்.