For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் கெஞ்சித்தான் அரசியலுக்கு வந்தார் ஜெ... ஜெ.வை சிறுமைப்படுத்துகிறாரா தோழி சசிகலா!

அரசியலில் ஆர்வமில்லாமல் இருந்த ஜெயலலிதாவை கெஞ்சிக் கூத்தாடி நான்தான் அரசியலுக்கு வரவழைத்தேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: அரசியலில் ஆர்வமில்லாமல் இருந்த ஜெயலலிதாவை கெஞ்சிக் கூத்தாடி நான்தான் அரசியலுக்கு வரவழைத்தேன் என சசிகலா தெரிவித்துள்ளார். தன்னால் தான் ஜெயலலிதா அரசியலுக்கு வந்தார் என்றும் சசிகலா கூறியிருப்பது அதிமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு பெருகி வருவதால் பீதியடையந்துள்ள சசிகலா இன்று போயஸ் கார்டன் முன்பு கூடியிருந்தவர்களிடையே பேசினார். அப்போது அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருந்த ஜெயலலிதாவை நான் தான் கெஞ்சிக்கூத்தாடி அரசியலுக்கு வரவழைத்தேன் என்றார்.

I only called Jayalalitha for politics : Sasikala

தன்னால் தான் ஜெயலலிதா அரசியலுக்கே வந்தார் என்றும் அவர் கூறினார். தன்னுடைய தயவால் தான் ஜெயலலிதாவே அரசியலில் இருந்தார் என்ற ரீதியில் சசிகலா பேசியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அதிமுக தொண்டர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சசிகலா மறைமுகமாக சிறுமைப்படுத்துகிறார் என குற்றம்சாட்டியுள்ளனர். தன்னுடைய திறமையை உயர்த்தி பேசுவதற்காக மறைந்த முதல்வரை சிறுமைப்படுத்துவதா என்றும் அவர்கள் கொந்தளித்துள்ளனர்.

English summary
sasikala was saying that Jayalalitha was not interested in Politics. And she said I only called Jayalalitha for politics. Sasikala's this speech made shock among ADMK workers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X