மெரினாவில் மூழ்கிய 3 ஐ.டி.ஐ மாணவர்கள்- இன்று கரை ஒதுங்கிய உடல்கள்!
சென்னை: சென்னை மெரினா கடற்கடையில் குளிக்கச் சென்று மாயமான மூன்று ஐ.டி.ஐ மாணவர்களின் உடல்களும் கரை ஒதுங்கியுள்ளன.
தீபாவளி நாளான நேற்று நண்பர்களுடன் மூன்று பேரும் மெரினா கடற்கரையில் குளிக்கச் சென்ற போது திடீரென்று மாயமாகி உள்ளனர்.
இதனையடுத்து, அவர்களுடைய நண்பர்கள், மூன்று பேரையும் கடல் அலை இழுத்துச் சென்றதாக அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், மழையின் காரணமாக தேடுதல் பணியில் தாமதம் ஆனது.
இந்நிலையில் இன்று காலையில் கடலில் மூழ்கிய மூன்று மாணவர்களான பரத், வெங்கடேஷ், பாலாஜியின் உடல்கள் பட்டினப்பாக்கம், பெசண்ட் நகர், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ளன. இதில், பரத் மற்றும் பாலாஜி இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த மூன்று மாணவர்களும் சென்னை, கோட்டூர் புரத்தை சேர்ந்தவர்கள். இச்சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.