ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும்... சொல்கிறார் சதுரங்கவேட்டை நட்ராஜ்...!
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும் என நடிகர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் முடிவு செய்யவேண்டும் என நடிகர் நட்ராஜ் தெரிவித்துள்ளார். ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும் என்றும் நடிகர் நட்ராஜ் கூறியுள்ளார்.
அண்மையில் ரசிகர்களை சந்தித்த ரஜினி தயாராக இருங்கள் போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். மேலும் தான் ஒரு பச்சை தமிழன் என்றும் தமிழகத்தில் இருந்து தூக்கிப் போட்டல் இமயமலையில் தான் விழுவேன் வேறு எந்த மாநிலத்திற்கும் செல்ல மாட்டேன் என்றார்.
அரசியல் சிஸ்டம் சரியில்லை என்றும் அவர் கூறினார். ரஜினியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆதரவும் எதிர்ப்பும்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தலைவர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
சினிமா பிரபலங்கள் கருத்து
சினிமா துறையில் இருந்து பல பிரபலங்கள் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சதுரங்கவேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் நட்ராஜ், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது தனிப்பட்ட விஷயம்
அவர் கூறியதாவது, 'இவரு இதுக்கு தான் லாயக்கு என்று சொல்ல முடியாது. வராரு வரவில்லை என்பது அவரது தனிப்பட்ட விஷயம்.
வந்தால் நல்லா இருக்கும்
அவர் தான் முடிவு செய்ய வேண்டும். வந்தால் நல்லா இருக்கும் என்பது எங்க எல்லோருடைய நம்பிக்கை. அப்படி நம்பக் கூடியவர்களில் நானும் ஒருவன்' இவ்வாறு நட்ராஜ் தெரிவித்துள்ளார்.